ராஜஸ்தான் கோவிலுக்குள் நுழைந்ததால் தூக்கிலிடப்பட்ட இளைஞர் என பரவும் வீடியோ உண்மை என்ன
ராஜஸ்தான் கோவிலுக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்ட இளைஞர் என பரவும் வீடியோ உண்மை என்ன
ராஜஸ்தானைச் சேர்ந்த நாராயண் தாஸ் என்ற தலித் இளைஞர் உயர் சாதியினர் மட்டும் வழிபடும் கோவிலுக்குள் நுழைந்ததற்காக பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்ட வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், இந்த காணொளிக்கு விளக்கம் அளித்துள்ள ராஜஸ்தான் மாநில காவல்துறை, மேற்கண்டவாறு எந்த ஒரு சம்பவமும் நடைபெறவில்லை என்று கூறியுள்ளது. இந்த செய்தி போலியானது என்று ராஜஸ்தான் காவல்துறையினர் தங்களது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்.இந்த தகவலை பரப்பிய நபரை தேடி வருகிறோம். அவர் கைது செய்யப்பட்ட பிறகே உண்மையான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த வீடியோ எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை
உரிய ஆதாரம் கிடைத்தவுடன் செய்தியில் இணைக்கப்படும்
ராஜஸ்தான் காவல்துறை விளக்கம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://twitter.com/PoliceRajasthan/status/1784482813527605253
Tags: FACT CHECK இந்திய செய்திகள் மறுப்பு செய்தி