Breaking News

சென்னை பூங்காவில் விளையாடிய சிறுமியை கடித்துக் குதறிய 2 வளர்ப்பு நாய்கள் - உரிமையாளர் கைது!

அட்மின் மீடியா
0

சென்னை பூங்காவில் விளையாடிய சிறுமியை கடித்துக் குதறிய 2 வளர்ப்பு நாய்கள் - உரிமையாளர் கைது!

சென்னை ஆயிரம் விளக்கு மாதிரிப் பள்ளி சாலையில் உள்ள பூங்கா காவலாளியின் 5 வயது மகளை 2 வளர்ப்பு நாய்கள் கடித்துக் குதறின.

பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த காவலாளியின் மகள் சுதக்ஷாவை, புகழேந்தி என்பவரது 2 வளர்ப்பு நாய்கள் திடீரென கடித்துக் குதறின. சிறுமி அலறியதைக் கேட்டு காப்பாற்றிய தாய் சோனியாவையும் நாய்கள் கடித்துள்ளன. பலத்த காயமடைந்த சிறுமி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

5 வயது சிறுமியை கடித்துக் குதறிய ராட்வில்லர் வகை வளர்ப்பு நாய்களின் உரிமையாளர் புகழேந்தி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். சம்பவம் தொடர்பாக புகழேந்தி, அவருடைய மனைவி, மகன் மீது 2 பிரிவின் கீழ்ஆயிரம் விளக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்கள்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback