Breaking News

புனேவில் கிரிக்கெட் விளையாடிய போது உயிர் நிலையில் பந்து பட்டு 11 வயது சிறுவன் உயிரிழப்பு பதறவைக்கும் சிசிடிவி வீடியோ

அட்மின் மீடியா
0

புனேவில் கிரிக்கெட் விளையாடிய போது உயிர் நிலையில் பந்து பட்டு 11 வயது சிறுவன் உயிரிழப்பு பதறவைக்கும் சிசிடிவி கா

11 year old boy in Pune died after Cricket Tennis Ball hit his private part, the incident was caught on CCTV Camera.

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவின் லோஹேகான் பகுதியில் 11 வயது சிறுவன் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான். 

கோடை விடுமுறையால் 11 வயது சிறுவனான சௌர்யா காளிதாஸ் காண்ட்வே லோஹேகானில் உள்ள ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் மே 2 ஆம் தேதி இரவு  தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடியுள்ளார்

அவர் பௌலிங் பந்துவீசும்போது எதிர் திசையில் பேட்டிங் செய்த நபர் அடித்த பந்து அவரது உயிர்நிலையில் வேகமாக பட்டுள்ளது இதனால் அவர் சுருண்டு  விழுந்தார். 

உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகனை இழந்த துக்கத்தில் கதறி அழுதனர். இதுகுறித்து விமந்தல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கிரிக்கெட் விளையாடும்போது, பந்து பட்டு சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி வீடியோவில் பதிவாகியுள்ளது இந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/lokmattimeseng/status/1787365345793036652

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback