அஜ்மீர் மசூதிக்குள் நுழைந்து இமாம் வெட்டி படுகொலை நடந்தது என்ன முழு விவரம்
அஜ்மீர் மசூதிக்குள் நுழைந்து இமாம் வெட்டி படுகொலை நடந்தது என்ன முழு விவரம்
ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் காஞ்சன் நகரில் உள்ள முகமதி மதீனா மசூதியின் இமாம் முகமது மாஹிர் (30). உத்தரபிரதேசத்தின் ராம்பூரை சேர்ந்த இவருடன் மசூதியில் சில சிறுவர்களும் மசூதியில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் மசூதிக்குள் முகமூடி அணிந்தபடி நுழைந்த 3 மர்ம நபர்கள், முகமது மாஹிரை வெட்டி படுகொலை செய்தனர்.
மசூதிக்குள் இருந்த 6 சிறுவர்களை, சத்தம் போடக்கூடாது என மிரட்டிய மர்ம நபர்கள், மாஹிரைக் கொலைச் செய்து விட்டு, அங்கிருந்து தப்பியோடினர். மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதும் சிறுவர்கள் சத்தம் போட்டுக்கொண்டு வெளியே ஓடிவந்தனர்.
இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வெளியில் தெரியவந்தது.தகவலறிந்த ராம்கஞ்ச் காவல் நிலையப் பொறுப்பாளர் ரவீந்திர கிஞ்சி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று, முகமது மாஹிரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு, வழக்குப்பதிவு செய்து மசூதி அமைந்துள்ள பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடந்து வருகின்றனர்
மேலும் சம்பவத்தின் முக்கிய சாட்சிகளாகக் கருதப்படும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அவர்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குவதற்கும் போலிசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து, வருகின்றனர், மேலும் கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
இமாம் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அறிந்த மசூதி நிர்வாகத்தினரும், முஸ்லிம் சமூகத்தினரும், கொலையாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இந்த கொலை சம்பவம் அஜ்மீரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags: இந்திய செய்திகள்