Breaking News

வெள்ளிக்கிழமை ஜும்மா அன்று வரும் தேர்தல் நாள் ஜமாஅத்துல் உலமா சபை முக்கிய அறிவிப்பு

அட்மின் மீடியா
0
வெள்ளிக்கிழமை ஜும்மா அன்று வரும் தேர்தல் நாள் ஜமாஅத்துல் உலமா சபை முக்கிய அறிவிப்பு

தேர்தல் நாள் ஓர் அறிவிப்பு


எதிர்வரும் 19.04.2024 அன்று தமிழத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் அறிவோம்.

வளமான இந்தியாவை உருவாக்கிட, எல்லோரும் சமவாய்ப்பை பெற்றிட I.N.D.I.A கூட்டணிக்கே தேசநலன் கருதி அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

தேர்தல் நாள் வெள்ளிக்கிழமையாக இருப்பதால் ஜும்ஆ தொழுகை மற்றும் பயான், குத்பா ஆகிய வழமையான அமல்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாத அளவில் நேரம் ஒதுக்கி நம் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும்.

சங்கைமிகு இமாம்கள் வாக்குப்பதிவு நடைபெறும் வெள்ளிக்கிழமை ஜுமுஆ உரையில் நூறு சதவிகித வாக்குப்பதிவை மட்டுமே வலியுறுத்தி அறிவிப்பு செய்ய வேண்டும். மேலும், தேர்தல் விதிகளை கவனத்தில் கொண்டு சர்ச்சைகளுக்கு இடமளிக்காத வகையில் அன்றைய ஜுமுஆ உரை பொதுவான பயானாக அமையும்படி பார்த்துக் கொள்வதே நல்லது.

வாக்குப்பதிவுக்காக ஜும்ஆவின் அமல்களில் எவ்வித மாற்றங்களையும் செய்வது சரியானதல்ல என்பதை மஸ்ஜிதுகளின் கண்ணியமிகு நிர்வாகப்பெருமக்களுக்கும் ஆலிம் பெருமக்களுக்கும் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நினைவூட்டுகிறது

Tags: அரசியல் செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback