Breaking News

சென்னை மாநகர பேருந்து ஸ்டாப்பிங்கில நிக்காம போகுதா.புகார் அளிக்க இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க!

அட்மின் மீடியா
0

சென்னை மாநகர பேருந்து ஸ்டாப்பிங்கில நிக்காம போகுதா.புகார் அளிக்க இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க!

பயணிகளின் குறைகளை தீர்க்கவும், பயணிகள் சிரமமின்றி பயணம் செய்ய போக்குவரத்து துறை கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது. 

சென்னையில் பேருந்து நிறுத்தங்களில் மாநகரப் பேருந்துகள் நிற்காமல் சென்றால் 149 என்கிற எண்ணில் புகார் அளிக்கலாம் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. 

அந்த எண்ணில்  நிற்காமல் செல்லும் பேருந்தின் பதிவு எண், பேருந்து நிறுத்தத்தின் விவரங்களை குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

போக்குவரத்து துறையின் இந்த அறிவிப்பு பேருந்து பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback