Breaking News

சொத்து கேட்டு பெற்ற தந்தையை கொடூரமாக தாக்கிய மகன் நெஞ்சை உலுக்கும் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

சொத்து கேட்டு பெற்ற தந்தையை கொடூரமாக தாக்கிய மகன் நெஞ்சை உலுக்கும் வைரல் வீடியோ

பெரம்பலுார் மாவட்டம் கட்டராங்குளம் பகுதியைச் சேர்ந்தவர், குழந்தைவேல், 68. இவர் மனைவி, மகன் சந்தோஷ் 34, மகள் சங்கவி, 32, ஆகியோர் உள்ளனர்.குழந்தைவேலுக்கு, சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே, சார்வாய் பகுதியில், மரவள்ளி கிழங்கு அரவை செய்யும் சேகோ ஆலையும், பெரம்பலுார் பகுதியில் அரிசி ஆலை மற்றும் 100 ஏக்கரில் விவசாயத் தோட்டமும் உள்ளது. 

சந்தோஷ் ஆத்துாரில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.கடந்த பிப்ரவரி மாதம் சொத்துகளை தனது பெயருக்கு எழுதி வைக்கும்படி, அவரது தந்தை குழந்தைவேலிடம், மகன் சக்திவேல் கேட்டுள்ளார். அதற்கு, தந்தை மறுப்பு தெரிவித்தபோது, தகராறு செய்து, வீட்டில் உள்ள பொருட்களை அடித்து சேதப்படுத்தியுள்ளார். இந்நிலையில் 16.02.2024 அன்று பெரம்பலுாரில் உள்ள வீட்டின் வெளியே சோபாவில் அமர்ந்திருந்த தந்தை குழந்தைவேலை, சரமாரியாகவும், கொடூரமாகவும் தாக்கியுள்ளார். 

அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து படுகாயம் அடைந்த குழந்தை வேலுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர், 

இந்நிலையில் கடந்த 21.04.2024 ஆம் தேதி குழந்தைவேலு வீட்டில் உள் தாழிட்ட நிலையில் அவரது அறையில் இறந்து கிடந்தார் உறவினர்கள் குழந்தை வேலுவை நல் அடக்கம் செய்தனர்.

வீட்டில் பொருத்தப்பட்ட 'சிசிடிவி'யில், தந்தையை, மகன் தாக்கும் இரண்டு வீடியோக்கள், பதைபதைக்கும் காட்சிகளுடன் இருந்த நிலையில், நேற்று, சமூக வலைத்தளங்களில் அடுத்தடுத்து வெளியாகி வைரலானது.

இது குறித்து கைகளத்தூர் போலீசார் சந்தோஷை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர், விசாரணை முடிந்த பிறகு குழந்தை வேலு இறப்பிற்கு காரணம் தெரியவரும் எனவும் போலீசார் தரப்பில் கூறப்படுகின்றது

வீடியோ பார்க்க:-

https://twitter.com/hyderali857685/status/1783557806546887163

Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback