கையில் மருதாணி,மெஹந்தி போட்டவர்களுக்கு வாக்களிக்க அனுமதி மறுப்பா? – தேர்தல் அலுவலர் விளக்கம் முழு விவரம்
கையில் மருதாணி,மெஹந்தி போட்டவர்களுக்கு வாக்களிக்க அனுமதி மறுப்பா? – தேர்தல் அலுவலர் விளக்கம் முழு விவரம்
தமிழகத்தில் மருதாணி, மெஹந்தி போட்டவர்களுக்கு வாக்களிக்க அனுமதி கிடையாது என சமூக வலைதளங்களில் தற்போது பரவி வரும் செய்திக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் கையில் மருதாணி, மெகந்தி போட்டிருந்தால் வாக்களிக்க அனுமதிக்கப்படாது என்று இணையத்தில் வைரலாக பரவியது.
இந்த தகவல் அடிப்படை ஆதாரமற்ற வதந்தி, பண்டிகை திருமண நிகழ்வுகளின் போது பெண்கள் அதிகளவில் மெகந்தி போடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால்,வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் யார் வேண்டுமானாலும் வாக்களிக்கலாம் என தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்
Tags: தமிழக செய்திகள்