Breaking News

ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ பாஸ் - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அட்மின் மீடியா
0

ஊட்டி, கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தை கட்டுப்படுத்த இபாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மே 7 முதல் ஜூன் 30 வரை இபாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என நீலகிரி, திண்டுக்கல் ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் உத்தரவு


இதற்கான தொழில்நுட்ப உதவிகளை தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தல்

உள்ளூர் மக்களுக்கு இதற்கு விலக்கு அளிக்க வேண்டும். எனவும் இபாஸ் நடைமுறைகள் குறித்து இந்திய அளவில் விரிவான விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தீர்ப்பு

கொடைக்கானல் மற்றும் நீலகிரி செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 - ஜூன் 30 வரை இ-பாஸ் வழங்க வேண்டும். இ-பாஸ் உள்ள சுற்றுலா வாகனங்களை மட்டுமே மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும். 

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் குடும்பம் குடும்பமாக சுற்றுலா செல்கின்றனர். இந்நிலையில் ஊட்டி , கொடைக்கானல் பகுதிகளில் மக்கள் அதிகம் செல்வதால் அங்கு கடும் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்கவே இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback