Breaking News

கல்லிடைக்குறிச்சி ஊருக்குள் புகுந்து சாலையில் சென்று கொண்டிருந்தவரை ஆக்ரோஷமாக விரட்டிய கரடி - வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி!

அட்மின் மீடியா
0

கல்லிடைக்குறிச்சி ஊருக்குள் புகுந்து சாலையில் சென்று கொண்டிருந்தவரை ஆக்ரோஷமாக விரட்டிய கரடி - வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி!

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியில் நேற்று காலை திடீரென கரடி ஒன்று ஊருக்குள்புகுந்துள்ளது. பெரிய பள்ளிவாசல் தெரு பகுதியில் ரமலான் சிறப்புத் தொழுகைக்குப் பின் மக்கள் வீடு திரும்பிகொண்டிருந்தனா். இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அலறியடித்து கொண்டு அங்கும், இங்குமாக ஓடினர். அப்போது கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணை அந்த கரடி தாக்கி உள்ளது.இதில் அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அந்த பெண் அம்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இதுகுறித்து தகவல் அறிந்த அம்பை வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் என சுமார் 30 க்கும் மேற்பட்டோர் கல்லிடைக்குறிச்சி பகுதியில் கரடியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே கரடி ஊருக்குள் புகுந்து பொது மக்களை விரட்டிய காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், கரடி துரத்த ஒருவர் பதறியடித்துக்கொண்டு ஓடி வருகிறார். அவரை விரட்டியபடியே கரடி பின் தொடர்ந்து வருகிறது. தொடர்ந்து அந்த நபர் ஒரு வீட்டுக்குள் புகுந்து தப்பிக்கின்றார். கரடி தொடர்ந்து அந்த தெருவிற்குள் ஓடுகிறது. சில நாய்களும் கரடியை குரைத்தவாறு விரட்டுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://twitter.com/reflectnewstn/status/1778408389220966858

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback