Breaking News

சென்னையில் இந்த 7 மண்டலங்களில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

சென்னையில் இந்த 7 மண்டலங்களில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்

பிரதான குழாய் மாற்றும் பணி நடைபெறவுள்ளதால் சென்னை மாநகராட்சியில் 7 மண்டலங்களில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகின்றது என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது

அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களில் இன்று இரவு 9 மணி முதல் 27ஆம் தேதி இரவு 9 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகின்றது

பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளவும், அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர்பெற்றுக்கொள்ள cmwssb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம் என குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback