Breaking News

உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சைக்கு சென்ற 26 வயதான புதுச்சேரி இளைஞர் உயிரிழந்த பரிதாபம்

அட்மின் மீடியா
0

உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சைக்கு சென்ற 26 வயதான புதுச்சேரி இளைஞர் உயிரிழந்த பரிதாபம்

புதுச்சேரி முத்தையால் பேட்டை டிவி நகரில் வசித்து வருபவர் செல்வநாதன். இவருக்கு ஹேமச்சந்திரன் , ஹேமராஜன் என்ற இரட்டை ஆண் பிள்ளைகள். 26 வயதான ஹேமசந்திரன் பிஎஸ்சி ஐடி முடித்துவிட்டு பணியில் இருந்துள்ளார். 

இவர் உடல் பருமன் காரணமாக சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மருத்துவர்கள் இவரை அறுவை சிகிச்ச்சை மூலம் உடல் பருமனை குறைக்கலாம் என அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. 

அதன்படி நேற்று ஹேமச்சந்திரனுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டு சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் எதிர்பாராத விதமாக ஹேமச்சந்திரன் உயிரிழந்தார்.

ஹேமசந்திரன் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் ஹேமச்சந்திரன் குடும்பத்தினர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

Tags: இந்திய செய்திகள் புதுச்சேரி செய்திகள்

Give Us Your Feedback