Breaking News

ஆந்திரா, சென்னை அருகே 3.9 அளவில் நிலநடுக்கம் ஜப்பானில் 5.6 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் earthquake chennai

அட்மின் மீடியா
0

அடுத்தடுத்து நிலநடுக்கம் ஆந்திரா, சென்னையில் நில அதிர்வு, ஜப்பானில் கடும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் earthquake chennai

சென்னை அருகே லேசான நில அதிர்வு பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 3.9 என்ற மிக லேசான அளவில் நில அதிர்வு பதிவாகி உள்ளது. 




ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து கிழக்கு வடகிழக்கில் 58 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று இரவு சுமார் 8.43 மணியளவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வின் தாக்கம் சென்னை அருகிலும் ஆந்திரா - தமிழ்நாடு எல்லைப் பகுதியான கும்மிடிப்பூண்டி பகுதியிலும் உணரப்பட்டுள்ளது. 

இதை தொடர்ந்து ஜப்பானிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது.நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

earthquake chennai

Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback