இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கம்!
அட்மின் மீடியா
0
இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகானை நீக்கி அவசர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
தலைவரின் முழு அதிகாரமும் பொதுச்செயலாளர் கண்ணதாசனுக்கு வழங்கப்பட்டது. இவரின் தலைமையிலேயே கட்சி செயல்படும் என அறிவிப்பு.
தலைவருக்கு இருந்த அதிகாரங்கள் அனைத்தும் பொதுச்செயலாளர் கண்ணதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இனி மன்சூர் அலிகான் உறுப்பினராக மட்டுமே இருக்க முடியும்.தன்னிச்சையாக செயல்பட்டதாலும், நிர்வாகிகள் இடையே எந்தவித ஆலோசனையையும் மேற்கொள்ளாததாலும் அவசர செயற்குழுவைக் கூட்டி முடிவெடுக்கப்பட்டதாக பொதுச்செயலாளர் கண்ணதாசன் அறிவித்துள்ளார்
Tags: அரசியல் செய்திகள்
