Breaking News

திருநெல்வேலி தொகுதி அதிமுக வேட்பாளர் சிம்லா முத்துசோழன் மாற்றம் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

திருநெல்வேலி தொகுதி அதிமுக வேட்பாளர் சிம்லா முத்துசோழன் மாற்றம் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு


நெல்லை தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சிம்லா முத்துசோழனுக்கு பதிலாக ஜான்சி ராணியை வேட்பாளராக அறிவித்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

திருநெல்வேலி தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சிம்லா முத்துச்சோழனுக்கு பதிலாக, ஜான்சிராணி போட்டியிடுவார் என அறிவிப்பு!

இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்:

கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் முக்கிய அறிவிப்பு

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் 2024 திருநெல்வேலி தொகுதி கழக வேட்பாளர் மாற்றம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 19.4.2024 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில், திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் சிம்லா முத்துச்சோழன் அவர்களுக்கு பதிலாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக,

திருமதி M. ஜான்சிராணி, B.A., அவர்கள்(கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழக இணைச் செயலாளர் திசையன்விளை பேரூராட்சி மன்றத் தலைவர்) தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback