Breaking News

ரமலான் அன்று வரும் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் தமிழக அரசிற்க்கு ஜமா அத்துல் வேண்டுகோள்

அட்மின் மீடியா
0

ரமலான் அன்று வரும் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் தமிழக அரசிற்க்கு ஜமா அத்துல் வேண்டுகோள்

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு தேர்வுகளின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஏப்ரல், 10, 2024 அன்று அறிவியல் தேர்வும், ஏப்ரல் 12, 2024 அன்று சமூக அறிவியல் தேர்வும் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏப்ரல் 11, 2024 அன்று ஈகைப் பெருநாள்(ரம்ஜான்) விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பதால் அன்று மட்டும் தேர்வுகளை நடத்தாமல் அதற்கு முந்தைய தினமும் பிந்தைய தினமும் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

முஸ்லிம்களின் பெருநாட்கள் இரண்டும் பிறையின் அடிப்படையில் கொண்டாடப்படுவதால் இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகை அரசு அறிவித்துள்ள ஏப்ரல் 11 அன்றோ அல்லது ஒருநாள் முன்போ பின்போ கொண்டாடப்பட வாய்ப்புள்ளது.

நமது நாட்டில் பெரும்பாலும் வட பகுதியில் ஒருநாளும் தென்பகுதியில் மற்றொரு நாளும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டுவரும் சூழலில் ஏப்ரல் 10, 2024 அன்றும் ஏப்ரல் 12, 2024 அன்றும் தேர்வுகளை எழுதுவது என்பது முஸ்லிம் மாணவர்களுக்குத் தேவையற்ற மன அழுத்தத்தையும், சிரமத்தையும் ஏற்படுத்தும்.

எனவே, ஏப்ரல் 10, 2024 மற்றும் ஏப்ரல் 12, 2024 அன்று நடைபெற உள்ள தேர்வுகளை வேறொரு நாட்களில் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ள நிலையில் 

தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரைக்கான ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணை அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதியும் தேர்வு நடைபெறுவதாக உள்ளது. வரும் ஏப்ரல் 10 அல்லது 11 இருதினங்களில் ஒன்று ஈகைத்திருநாள் எனும் பெருநாள் பண்டிகை நாளாக அமையும்.

எனவே அவ்விருதினங்களிலும் தேர்வுகள் எதுவும் நடைபெறாத அளவில் 10 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்வை வேறு தேதிக்கு மாற்றி அறிவித்து உத்தரவிட வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback