சென்னையில் உள்ள தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு! sekhmet
அட்மின் மீடியா
0
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மதுபான விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் மூவர் உயிரிழப்பு.
சென்னை ஆழ்வார்பேட்டையில் ஷேக்மெட் என்ற தனியார் கேளிக்கை விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் திடீரென கிளப்பின் முதல்தளத்தில் உள்ள மேற்கூரை இடிந்து விழுந்தது.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு சென்று காவல்துறையினர் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் இடிபாடுகளில் சிக்கி கிளப் ஊழியர்களான வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தது தெரியவந்தது.விபத்து நடந்த பகுதிக்கு மாநில பேரிடர் மீட்பு பணிகள் குழு சென்றுள்ள நிலையில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன.
Tags: தமிழக செய்திகள்
