Breaking News

சிங்கபெண்கள் வீட்டிற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளையர்களை அடித்து விரட்டிய தாய், மகள் - வைரலாகும் சிசிடிவி வீடியோ mother and daughter fight two armed robbers

அட்மின் மீடியா
0

சிங்கபெண்கள் வீட்டில் கத்தியை காட்டி மிரட்டிய 2 கொள்ளையர்களை தாயும் மகளும் அடித்து விரட்டும் சிசிடிவி வீடியோ

ஹைதராபாத்தை சேர்ந்தவர் அமிதா மெஹோத். 42 வயதான இவர் தனது மகளுடன் ரசூல்புராவின் பைகா காலனியில் உள்ள பேகம்பேட்டையில் வசித்து வந்தார். 

இந்நிலையில் நேற்று முந்தினம் மதியம் 2 மணியளவில் இவரது வீட்டிற்கு அடையாளம் தெரியாத  2 கொள்ளையர்கள் வந்து கதவைத் தட்டியுள்ளனர்.அப்போது வேலைக்காரி கதவைத் திறந்துள்ளார். உள்ளே இருப்பவரிடம் பார்சலை கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதற்கு அவர், 'வெளியே காத்திருங்கள்' என்றார்.உடனே அவர்களில் ஒருவர் கத்தியை எடுத்து வேலைக்காரியின் கழுத்தில் வைத்து கொலை செய்வதாக மிரட்டியுள்ளான். 

மற்றொருவன் துப்பாக்கியை எடுத்துள்ளான். பின்னர் இருவரும் வீட்டிற்குள் நுழைந்தனர். வீட்டில் இருந்த அமிதா மெஹோத் மற்றும் அவரது மகளிடம் வீட்டில் உள்ள நகை பணம் கேட்டு மிரட்டியுள்ளார்கள்

தாயும் மகளும் துணிந்து ஆயுதம் ஏந்தி வந்த கொள்ளையர்களை தாக்குகின்றார்கள், கொள்ளையர்கள் இதனை சற்றும் எதிர்பாராததால் வீட்டை விட்டு வெளியே ஓடுகின்றார்கள்

மேலும் தாயும் மகளும் கூச்சலிட்டபடி தப்பியோடிய கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பின்னர், தப்பியோடிய கொள்ளையர்களை அக்கம் பக்கத்தினர் பிடித்தனர். அவர்கள் பிரேம் சந்த் மற்றும் சுஷில் என்பது தெரியவந்தது. புகாரின் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. வடக்கு காவல் துணை ஆணையர் ரோகிணி பிரியதர்ஷினி, பெண்களின் துணிச்சலைப் பாராட்டினார்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://twitter.com/sowmith7/status/1771067926990516565

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback