6 வயது பூர்த்தியானால் மட்டுமே 1-ம் வகுப்பில் சேர்க்க வேண்டும்: மத்திய கல்வி அமைச்சகம் 1st standard admission age
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை நாடு முழுவதும் கடந்த கல்வி ஆண்டிலேயே அமலுக்கு வந்துள்ளது எனவும் இதனை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறித்தியுள்ளது
ஆனால் மத்திய அரசு கொண்டுவந்த புதிய கல்விக்கொள்கையை தமிழகம் உள்பட சில மாநிலங்கள் அமல்படுத்தவில்லை. இந்த சூழலில் 2024-25-ம் கல்வி ஆண்டு வருகிற ஜூன் மாதம் தொடங்க உள்ளது.
இந்த நிலையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.
அதில், பிரீ கேஜிக்கு மூன்று வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும், எல்கேஜி எனில் நான்கு வயதும், யுகேஜி எனில் ஐந்து வயதும் பூர்த்தி ஆகி இருக்க வேண்டும், எனவும் முதல் வகுப்பு சேர்க்க வேண்டும் எனில் மாணவர்களுக்கு ஆறு வயது நிரம்பியிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த ஆண்டு ப்ரீ கேஜி முதல் 2ம் வகுப்பு வரை புதிய கல்விக் கொள்கை அடிப்படையிலான பாடத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. இந்த ஆண்டு முதல் 3, 4, 5 ஆகிய வகுப்புகளுக்கு புதிய கல்வி கொள்கை நடைமுறைக்கு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை 1-ம் வகுப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான வயது வரம்பு 5 என்ற பழைய நடைமுறையிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: இந்திய செய்திகள் கல்வி செய்திகள் தமிழக செய்திகள்
