Breaking News

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடையாது.! 3 மாதத்தில் வழக்கை முடிக்க உத்தரவு.! சென்னை உயர்நீதிமன்றம்

அட்மின் மீடியா
0

 அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் மறுப்பு - சென்னை உயர்நீதிமன்றம்

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2வது முறையாக தாக்கல் செய்தார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தருவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என கூறி ஜமீனை வழங்க மறுத்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்கும் முதன்மை அமர்வு நீதிமன்றம் தினசரி விசாரணை அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வழக்கை 3 மாதத்தில் முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் உத்தரவிட்டார்.

சட்டவிரோத பண பரிவர்த்தையில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த 14-ம் தேதி அதிகாலை கைது செய்தது. அவரை கைது செய்தபோது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்பு அவருக்கு அங்கு நடந்த பரிசோதனையில் இருதயத்தில் இரத்த அடைப்பு உள்ளது பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்பட்டதுஅதன்பின்பு நீதிமன்ற அனுமதியுடன் காவேரி மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தற்போது நீதிமன்ற காவலில் புழல் சிறையில் உள்ளார்.இந்த சூழலில் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்

தனக்கு ஜாமீன் வழங்க வேண்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது

இந்த மனுவை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார் இரு தரப்பு வாதம் முடிவடைந்த நிலையில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க முடியாது என மறுப்பு  தெரிவித்து  செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்கும் முதன்மை அமர்வு நீதிமன்றம் தினசரி விசாரணை அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வழக்கை 3 மாதத்தில் முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் உத்தரவிட்டார்.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback