மாணவர்களுக்கு மாதம் 1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் தமிழக அரசு அறிவிப்பு
தமிழ்ப் புதல்வன்6 முதல் 12 வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ. 1,000- ரூ.360 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயின்று தற்போது உயர்கல்வியில் பகிர்ந்து வரும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய உதவித்தொகை வழங்கும் திட்டத்தினை தமிழக அரசு அறிவித்துள்ளது.
2024−2025 ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் வாசித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த திட்டத்தினை அறிவித்தார். ஏற்கனவே அரசு பள்ளிகளில் பயின்று தற்போது உயர் கல்வியில் பயின்று வரும் மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப் பெண்கள் திட்ட மூலம் மாதம் தோறும் 1000 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வந்தது. இனி தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் இந்த தொகை மாணவர்களுக்கும் மாதம் தோறும் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் இதற்காக ரூபாய் 360 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்