Breaking News

பால் ,பிஸ்கெட், எண்ணெய், உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவரில் அடைத்து விற்க தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அட்மின் மீடியா
0

பால் ,பிஸ்கெட், எண்ணெய், உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவரில் அடைத்து விற்க தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

 


பிளாஸ்டிக் கவர்களின் உணவுப் பொருட்களை விற்க தடையில்லை – தமிழ்நாடு, புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவுதமிழகத்தில் 14 பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதித்து 2018-ல் உத்தரவிட்டிருந்தது
 
அதில் நாம் அன்றாட பயன்படுத்தப்படும் உணவு பொருட்களான அரிசி, பருப்பு, சர்க்கரை மற்றும் பால் உள்ளிட்டு பொருட்களை பிளாஸ்டிக்கில் அடைத்து விற்பதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது.
 
அதேசமயம் கடந்த 2020 ஆம் ஆண்டு அந்த விதிவிலக்கும் அரசாணை மூலம் திரும்பப் பெறப்பட்டது.இதைத்தொடர்ந்து, ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதித்த தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி, தமிழ்நாடு, புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
 
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அன்றாட உணவு பொருட்களை அடைக்க பயனபடுத்தும் பிளாஸ்டிக் கவர்களை தடை செய்யும் அரசாணையை முழுமையாக அமல்படுத்துவது சாத்தியமில்லாததால், அதை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது
 
இந்நிலையில், பால் மற்றும் பால் பொருட்கள், பிஸ்கெட், எண்ணெய், உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க தடையில்லை எனவும் 14 பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback