Breaking News

தர்மபுரி தொப்பூர் கணவாய் பகுதியில் நடந்த கோர விபத்து 3 பேர் பலி சிசிடிவி வைரல் வீடியோ dharmapuri thoppur accident today

அட்மின் மீடியா
0

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருவது வாடிக்கையான ஒன்று இந்நிலையில் இன்று மாலை தொப்பூர் கணவாய் பகுதியில் உள்ள இரட்டை பாலத்தில்  இரண்டு லாரியும் ஒரு காரும் ஒன்றோடு ஒன்று பின்னால் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. 

இதில் ஒரு லாரி கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து கீழே விழுந்து நொறுங்கியது, இந்த கோர விபத்தில் 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்

விபத்து நடந்தது எப்படி:-

தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி சென்ற நெல் லாரி ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த இரண்டு லாரிகள் மற்றும் கார்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது, இதில் ஒரு லாரி பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு கீழே விழுந்தது நெல் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி இடையே சிக்கி இருந்த  லாரியும் கார்களும் தீப்பிடித்து எரிந்தது

சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காரில் தீப்பிடித்து எரிந்ததில் கருகிய நிலையில் மூன்று உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது.இறந்தவர்களின் விபரங்கள் முழுமையாக தெரியவில்லை மீட்பு பணிகள் முடிந்து பின்பு தெரியவரும் என கூறப்படுகிறது  

மேலும் விபத்தில் படுகாயமடைந்தவர்கள் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து தொடர்பான சிசிடிவி வீடியோ பார்க்க:-

இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/DrSenthil_MDRD/status/1750148267818807473 

இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/mannar_mannan/status/1750146369623310601

Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback