Breaking News

2 ஆண்டு பி.எட் படிப்புக்கு அனுமதி இல்லை! முழு விவரம் 2 year Bed course closed

அட்மின் மீடியா
0

அடுத்த கல்வியாண்டு முதல் 2 ஆண்டு பி.எட் படிப்பு நடத்த கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படாது.

அடுத்த கல்வியாண்டு முதல் 4 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எட் படிப்புகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் சுற்றறிக்கை!

அடுத்த கல்வியாண்டு முதல் 2 ஆண்டு பி.எட். படிப்பு நடத்த கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படாது என்று என்.சி.டி.இ தெரிவித்துள்ளது. மேலும் 4 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எட். படிப்புகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தேசிய ஆசிரியர் கவுன்சில் அறிவித்துள்ளது.


அடுத்த கல்வி ஆண்டு (2024-25) முதல் 2 ஆண்டு பி.எட் படிப்புக்கு புதிய அனுமதிகளை கல்வி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டாம் என்றும், 4 ஆண்டு பி.எட் திட்டத்தை நடத்த விரும்பும் கல்வி நிறுவனங்கள் ஆன்லைனில் புதிதாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்.சி.டி.இ., 2 ஆண்டு பி.எட். பாடத்திட்டத்தில் போதிய கல்வித் தகுதிகள் இல்லை. மாறாக, 4 ஆண்டு பி.எட். பாடத்திட்டம் கற்பித்தலை உள்ளடக்கியது மட்டுமல்லாமல், கல்வி ஆராய்ச்சி, குழந்தை உளவியல், கல்வித் தொழில்நுட்பம் மற்றும் பிற பாடங்களையும் எடுத்துக்காட்டுகிறது, 

இது ஆசிரியர்களுக்கு மிகவும் வலுவான அடித்தளத்தை வழங்குகிறது.2 ஆண்டு பி.எட். பாடத்திட்டம் வருங்கால மாணவர்களுக்கு ஒத்திவைக்கிறது, அதற்குப் பதிலாக 4 ஆண்டு திட்டத்தில் சேர வேண்டும்.



தற்போது இளநிலைப் பட்டப் படிப்புக்கு 3 ஆண்டுகள், பி.எட். படிப்புக்கு 2 ஆண்டுகள் என 5 ஆண்டுகள் ஆகின்றன. இதற்கு மாற்றாக புதிய கல்விக் கொள்கையின் கீழ் 4 ஆண்டுகளில் இளநிலைப் பட்டப் படிப்பு, பி.எட். படிப்புடன் கூடிய ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டத்தை (ஐடிஇபி) மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறிமுகம் செய்தது.

இந்த படிப்பில் சேர தேசிய தேர்வு முகமை நடத்தும் தேசிய பொது நுழைவு தேர்வை எழுத வேண்டும்.

இந்த நிலையில் அடுத்த கல்வி ஆண்டு (2024-25) முதல் 2 ஆண்டு பி.எட் படிப்புக்கு புதிய அனுமதிகளை கல்வி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டாம் என்றும், 4 ஆண்டு பி.எட் திட்டத்தை நடத்த விரும்பும் கல்வி நிறுவனங்கள் ஆன்லைனில் புதிதாக விண்ணப்பிக்கலாம் என்று ஆர்.சி.ஐ அறிவித்துள்ளது.



Tags: கல்வி செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback