பெருங்களத்தூரில் முதலை ஒன்று சாலையை கடக்கும் வீடியோ perungalathur road crossing crocodile
விடிய விடிய கொட்டித் தீர்த்து வரும் மழைக்கு நடுவே, பெருங்களத்தூர் - நெடுங்குன்றம் சாலையில் உள்ள வேலம்மாள் பள்ளி அருகில் முதலை ஒன்று சாலையை கடக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது!
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை புரட்டிப்போட்டு வருகிறது. இதனிடையே பெருங்களத்தூர் பகுதியில் நடுரோட்டில் முதலை ஒன்று ஊர்ந்து செல்லும் காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெருங்களத்தூர் - நெடுங்குன்றம் சாலையில் உள்ள வேலம்மாள் பள்ளி அருகே முதலை ஒன்று இரவில் உலா வந்தது. அந்த வழியாக வந்தவர்கள் முதலையை பார்த்ததும் பதறி விட்டார்கள் அந்த முதலையை ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.
முதலை வீடியோ குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என வனத்துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்
வீடியோ பார்க்க:-
https://twitter.com/v2mnews/status/1731492626191573139
Tags: வைரல் வீடியோ