வெள்ள பாதிப்பினால் கல்லூரிச் சான்றிதழ்களை இழந்தவர்கள் நகல்களைப் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் flood lost educational certificate apply online
flood lost educational certificate apply online மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்பினால் கல்லூரிச் சான்றிதழ்களை இழந்தவர்கள், கட்டணமின்றி அவற்றின் நகல்களைப் பெற https://www.mycertificates.in/ என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக உயர்கல்வி வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்பினால் கல்லூரிச் சான்றிதழ்களை இழந்த மாணவ / மாணவிகளுக்கு கட்டணமின்றி அவற்றின் நகல்களைப் பெற இணையதள உருவாக்கம்"
தமிழ்நாட்டில் "மிக்ஜாம்" புயல் காரணமாக சென்னை மாவட்டத்திலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மழை, வெள்ள பாதிப்பினால், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகச் சான்றிதழ்களை இழந்த மாணவ / மாணவிகள் தங்கள் சான்றிதழ்களின் நகல்களை கட்டணமின்றி பெறுவதற்கு ஏதுவாக www.mycertificates.in என்ற இணையதளம் உயர்கல்வி துறையால் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவ மாணவிகள் தங்களின் இழந்த சான்றிதழ் பற்றிய விபரங்களை மேற்கண்ட இணையதள வாயிலாக இன்றிலிருந்து பதிவு செய்யலாம்.
மாணவ / மாணவிகள் மேற்கண்ட இணையதள வாயிலாக சான்றிதழ்களின் விபரங்களை பதிவு செய்தபின் அவர்களது மின்னஞ்சலுக்கு ஒப்புகை (Acknowledgement) அனுப்பப்படும்.
அவ்வாறு பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்திலிருந்து பெறப்பட்டு, மாணவர்களுக்கு சென்னையில் வழங்கப்படும்.
மேலும், இணையதளத்தில் பதிவு செய்வது குறித்த சந்தேகங்களுக்கு தெளிவுபெற தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் செயல்படும் கட்டணமில்லா அழைப்பு மையத்தை 1800-425-0110 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
வெள்ள பாதிப்பினால் கல்லூரிச் சான்றிதழ்களை இழந்தவர்கள், கட்டணமின்றி அவற்றின் நகல்களைப் பெற்றுக்கொள்ளலாம்!
இணையதளம்: கிளிக் செய்யவும்
https://www.mycertificates.in/
Michaung புயல் மற்றும் வெள்ளம் காரணமாக கல்லூரி/பல்கலைக்கழகச் சான்றிதழ்களை இழந்த மாணவர்கள் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இருந்து நகல் சான்றிதழைப் பெறுவதற்கு உதவுவதற்காக, அவர்களிடம் இருந்து தகவல்களைச் சேகரிக்க தமிழ்நாடு அரசு இந்தப் பயன்பாட்டை உருவாக்கியுள்ளது. நகல் சான்றிதழ்களைப் பெறுவதற்குத் தேவையான விவரங்களுடன் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும். இந்த விண்ணப்பம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே. ஒவ்வொரு பாடத்திற்கும், தனித்தனி கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்
நீங்கள் இங்கு உள்ளிடும் விவரங்களை பின்னர் மாற்ற முடியாது என்பதால், அனைத்து கட்டாய விவரங்களையும் நிரப்பவும். அனைத்து தகவல் தொடர்புகளும் இந்த முகவரிக்கு அனுப்பப்படும் என்பதால், நீங்கள் வழங்கிய மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் சரியானவை என்பதை உறுதிப்படுத்தவும். விண்ணப்பதாரர்கள் Michaung புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். வெவ்வேறு பட்டங்கள்/பாடச் சான்றிதழ்களுக்கான கோரிக்கைகள் தனித்தனியாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்)
Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி