Breaking News

5 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் இல்லை -பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

அட்மின் மீடியா
0

புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்கள் 5 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்ற வேண்டும் எனவும், 5 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் கிடையாது எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

5 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் இல்லை -பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-

வட மாவட்டங்களில் அதிகளவில் காலி பணியிடங்கள் இருப்பதால் புதிய ஆசிரியர்கள் திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரியில் அதிகளவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.  

எனவே ஆசிரியர்களின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு தற்போது புதிதாக நியமனம் செய்யப்படும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு பணியிட மாறுதல் எதுவும் கிடையாது என தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறையின் செயலாளர் அறிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback