இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் , நாளை 4 மாவட்டங்கள் ரெட் அலர்ட் எந்த எந்த மாவட்டங்கள் தெரியுமா
இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் நாளை 4 மாவட்டங்கள் ரெட் அலர்ட் எந்த எந்த மாவட்டங்கள் தெரியுமா
நேற்று (02-12-2023) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (03-12-2023) காலை 0530 மணி அளவில் 'மிக்ஜாம்' புயலாக வலுப்பெற்று, 1130 மணி அளவில் அதே பகுதிகளில் புதுச்சேரிக்கு கிழக்கு- தென்கிழக்கே சுமார் 260 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 250 கிலோமீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு (ஆந்திரா) தெற்கு-தென்கிழக்கே சுமார் 380 கிலோமீட்டர் தொலைவிலும், பாபட்லாவிற்கு (ஆந்திரா) தெற்கு-தென்கிழக்கே சுமார் 490 கிலோமீட்டர் தொலைவிலும், மசூலிபட்டினத்திற்கு (ஆந்திரா) தெற்கு-தென்கிழக்கே சுமார் 500 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து 04-12-2023 முற்பகல் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும். பிறகு தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து 05-12-2023 முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தற்போது மணிக்கு 5 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் மிக்ஜாம்’ புயல் காரணமாக
இன்று டிசம்பர் 3 ம் தேதி ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
சென்னை,
செங்கல்பட்டு,
திருவள்ளூர்
மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்
டிசம்பர் 3 ம் தேதி ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
இராணிப்பேட்டை
மற்றும் காஞ்சிபுரம்
நாளை (டிச.04) ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
சென்னை
திருவள்ளூர்
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
நாளை (டிச.04) ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
ராணிப்பேட்டை
வேலூர்
திருவண்ணாமலை
விழுப்புரம்
03.12.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
04.12.2023: வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர், திருப்பத்தூர் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது
Tags: தமிழக செய்திகள்