Breaking News

வைகுண்ட ஏகாதசி திருவிழா டிசம்பர் 23ம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு vaikunta ekadasi local holiday

அட்மின் மீடியா
0

vaikunta ekadasi local holiday வைகுண்ட ஏகாதசி திருவிழா டிசம்பர் 23ம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


 

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுந்த ஏகாதசி திருவிழாவின் முக்கிய நாளான சொர்க்கவாசல் திறப்பு (பரமபதவாசல் திறப்பு) நடைபெறுவதை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு 23.12.2023 (சனிக்கிழமை) அன்று உள்ளுர் விடுமுறை வழங்கி அறிவிக்கப்படுகிறது.


இந்த விடுமுறையானது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கும் பொருந்தும், எனினும் பள்ளி/கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது. இந்த விடுமுறை நாளில் அரசு அனைத்து துணை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் பாதுகாப்பாக குறைந்த பணியாளர்களைக் கொண்டு செயல்படும். மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார்.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

மேலும் விவரங்களுக்கு:-  கிளிக் செய்யவும்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback