Breaking News

பள்ளிக்கு நடந்து சென்ற 13 வயது சிறுமி மாரடைப்பால் மரணம் தொடரும் சோகம் 13 years old girl dies of heart attack

அட்மின் மீடியா
0

கர்நாடகா மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தில் பள்ளிக்கு நடந்து சென்ற 13 வயது சிறுமி மாரடைப்பால் புதன்கிழமை உயிரிழந்தார்.அந்த சிறுமி முடிகெரே தாலுகாவில் உள்ள கேசவலு ஜோகண்ணனகெரே கிராமத்தில் வசிக்கும் 13 வயது ஸ்ருஸ்தி என அடையாளம் காணப்பட்டார்.

13 years old girl dies of heart attack

சிக்மகளூருவில் தாரதஹள்ளி ஆரம்பப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருபவர் ஹத்தாத். இவருக்கு வயது 13. வழக்கம் போல் இன்று காலை பள்ளிக்குச் சென்ற சிறுமி செல்லும் வழியில் திடீரென மயங்கி சரிந்துள்ளார் அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்

ஆனால் சிறுமி வரும் வழியிலேயே மாரைடைப்பால்  இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். 7ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

7-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஸ்ருஸ்தி, தராதஹள்ளி தொடக்கப் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது திடீரென சுருண்டு விழுந்தார்.MS கல்வி அகாடமி உடனே அவர் முடிகெரே நகரில் உள்ள அரசு எம்ஜிஎம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு டாக்டர்கள் சிறுமி மாரடைப்பால் இறந்ததை உறுதி செய்தனர்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback