சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இரவு மின்சார ரயில் ரத்து! முழு விபரம்
அட்மின் மீடியா
0
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே நாளை முதல் இரவு மின்சார ரயில் ரத்து!!
பராமரிப்பு பணி காரணமாக இன்று முதல் வருகிற டிசம்பர் 14ஆம் தேதி வரை சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் இரவு நேர கடைசி மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது.
பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று இரவு 11.59 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரயிலும், இரவு 11.40 மணிக்கு தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து -தெற்கு ரயில்வே அறிவிப்பு
பயணிகளின் பாதுகாப்பு கருதி, இன்று (29-11-2023) முதல் டிசம்பர் 14ம் தேதி வரை, நள்ளிரவு 12.25 மணி முதல் 2.25 மணி வரையான இரவு ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெரிவிப்பு!
Tags: தமிழக செய்திகள்