அரசு வாகனங்கள் தவிர தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்ட கூடாது - டிஜிபி உத்தரவு!
அரசு வாகனங்கள் தவிர தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்ட கூடாது - டிஜிபி உத்தரவு
காவலர்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட வாகனங்களில் இருந்து போலீஸ் என்ற போர்டு அல்லது ஸ்டிக்கர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என என சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார் அதில்...
தமிழகத்தில் உள்ள காவல்துறை உயரதிகாரிகள் அலுவலக வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கரை ஒட்டக்கூடாது.காவலர்கள் தங்கள் சொந்த தேவைக்காக பயன்படுத்தும் வாகனங்களில் போலீஸ் என்ற போர்டு அல்லது ஸ்டிக்கர்களை பயன்படுத்தக்கூடாதுஅலுவலக ரீதியாக பயன்படுத்தும் வாகனங்களில் மட்டுமே போலீஸ் என்ற ஸ்டிக்கர் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து காவல்துறை ஆணையர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் தங்கள் கீழ் பணிபுரியும் காவலர்கள் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் என்ற ஸ்டிக்கர் பயன்படுத்தி வந்தால் அதை அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும் என சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றில் காவல்துறை உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களிலும் கருப்பு ஸ்டிக்கர் பயன்படுத்தக் கூடாது என்றும், போலீஸ் என்ற போர்டு மற்றும் ஸ்டிக்கரை காவலர்கள் தனிப்பட்ட வாகனத்தில் பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது
Tags: தமிழக செய்திகள்