Breaking News

உத்திரபிரதேசத்தில் இளம் பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை 5 பேர் கைது

அட்மின் மீடியா
0

உத்திரபிரதேசத்தில் இளம் பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை 5 பேர் கைது

உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் விடுதி ஒன்றில் பணிபுரிந்த 25 வயது பெண்ணை, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி, கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

மது அருந்த வற்புறுத்தியும், பாட்டிலை தலையில் போட்டு உடைத்தும் அப்பெண் துன்புறுத்தப்பட்டதாக போலீசார் தகவல்; இச்சம்பவம் தொடர்பாக ஒரு பெண் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்



உத்திர பிரதேச மாநிலம் ஆக்ராவில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணை ஒரு கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. தகவல் அறிந்து சென்ற ஆக்ரா போலீசார் அந்த பெண்ணை மீட்டு ஒரு பெண் உட்பட 5 ஆண்கள் என 5 பேரை கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து அதனை காட்டி மிரட்டி அந்த பெண்ணை கொடூர கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் 

இந்நிலையில் இது தொடர்பாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகின்றது

அந்த வீடியோவில் ஆண் ஒருவர் அப்பெண்ணை தாக்கி விடுதி அறைக்குள் வலுக்கட்டாயமாக இழுத்து செல்வதும், அப்போது அந்த பெண் என்னை விட்டுவிடுங்கள்… நான் 2 குழந்தைகளுக்கு தாய்…” எனக் கூறி கதறி அழும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback