Breaking News

விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை - 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை - மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை

அட்மின் மீடியா
0

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த 18 ம் தேதி இரவு உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக சென்றுள்ளதாக தேமுதிக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

 


இந்நிலையில் கடந்த 20 ம் தேதி தேமுதிக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்று இருக்கிறார். அவர்கள் ஓரிரு நாளில் வீடு திரும்புவார்.செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக தவறான செய்திகளை வெளியிடும் தொலைக்காட்சிகளை பார்த்து யாரும் நம்பவேண்டாம். இது முற்றிலும் தவறான செய்திகள். இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவும்வேண்டாம், யாரும் பரப்பவும் வேண்டாம் என்று குறிப்பிட்டு இருந்தது

இந்நிலையில் தற்போது மருத்துவமனை வெளியிடுள்ள அறிக்கையில்:திரு. விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது. என அறிக்கை வெளியிட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback