கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் - ஏடிஎம் கார்டின் மாதிரி படம் இதோ
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் - ஏடிஎம் கார்டின் மாதிரி படம் இதோ
தமிழகத்தில் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்திற்க்கான சோதனையாக ரூபாய் 1 பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1000 மாதம் தோறும் அளிக்கும் கலைஞர் உரிமை தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல்வர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
மொத்தம் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் மகளிர் உரிமை திட்டத்தில் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு அதற்கான உரிய காரணம் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் எஸ்எம்எஸ் ஆக அனுப்பி வைக்கப்படும் என்று அரசு தெரிவித்து இருந்தது.
இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு எஸ்எம்எஸ் அனுப்பும் பணிகள் நடந்து வருவதாக தேர்வு செய்த பெண்களுக்கு கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு சோதனை அடிப்படையில், குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
பயனாளிகள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்ற தகவல் குறுஞ்செய்தி முலம் அனுப்படவுள்ளதாகவும், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1 செலுத்தி நேரடியாக வரவு வைக்கப்படுகிறதா என்பது சோதிக்கப்படவுள்ளது. ஒரு ரூபாய் அனுப்பியவுடன், விண்ணப்பதாரர்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வழியாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. தவறான வங்கிக் கணக்குகளுக்கு உரிமைத் தொகை சென்று விடக் கூடாது என்ற எண்ணத்தில் சோதனை அடிப்படையில் ஒரு ரூபாய் அனுப்பப்படுவதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் கைப்பேசி வழியாக விண்ணப்பதாரர்களைத் தொடர்பு கொண்டும் வங்கிக் கணக்கு விவரங்கள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன.
அதேபோல் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை. விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு 18.09.2023 முதல் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாதம்தோறும் உரிமைத் தொகை குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது. வங்கிக்கணக்கு இல்லாத பயனாளிகளுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கி அல்லது கூட்டுறவு வங்கிகளில் வங்கி கணக்கு தொடங்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி குடும்பத் தலைவிகளுக்கு என தனித்தனியாக ஏடிஎம் கார்டுகள் வழங்கப்பட உள்ளன.
இதற்காக ரூபே கார்டாக பிரத்யேகமாக மகளிர் புகைப்படத்தை அச்சிட்டு ஏடிஎம் கார்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த ஏடிஎம் கார்டுகள் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்பட உள்ளது. இதன் மூலம் உரிமைத்தொகையை குடும்பத் தலைவிகள் எடுத்துக் கொள்ள முடியும் என கூறப்படுகின்றது
இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் - ஏடிஎம் கார்டின் மாதிரி படம் வெளியிடப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்