அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா ,மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை
சென்னையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ தி.நகர் சத்யா, வடசென்னை அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.இன்று காலை 6.30 மணி முதல் சுமார் 18 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் அவருக்கு சொந்தமான 18 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
சென்னையில் 16 இடங்களிலும, திருவள்ளூர் மாவட்டத்தில ஒரு இடத்திலும், கோவை மாவட்டத்தில ஒரு இடத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சத்யா கடந்த 2016 முதல் 2021 வரை அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
அதேபோல், சென்னை தண்டையார்பேட்டையில், வட சென்னை வடகிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்
தண்டையார்பேட்டையில் உள்ள அவரது வீடு மற்றும் அவரின் நெருங்கிய உறவினர்கள் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.ஆந்திரா உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags: அரசியல் செய்திகள்