Breaking News

ஒரே நாடு ஒரே தேர்தல் சிறப்பு குழுவை அமைத்தது மத்திய அரசு முழு விவரம்

அட்மின் மீடியா
0

ஒரே நாடு ஒரே தேர்தல் சிறப்பு குழுவை அமைத்தது மத்திய அரசு.


2023 ம் ஆண்டு இறுதியில்  மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்தாண்டு மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இச்சூழ்நிலையில் வரும் 18 முதல் 22 வரை சிறப்பு பார்லிமென்ட் கூட்டத்தொடரை மத்திய அரசு கூட்டி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கும் மாநில சட்ட மன்ற தேர்தலுக்கும் பல ஆண்டுகால இடைவெளிகளில் தேர்தல் நடக்கிறது. இதனால், தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்படுவதால், வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுகின்றன.இதனையடுத்து, லோக்சபாவுக்கும், மாநில சட்டசபைக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வருகிறார்.

செப்டம்பர் 18ம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில், இதற்கான மசோதா நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான உறுப்பினர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது.

ஒரே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடத்துவது சாத்தியமா என்பது குறித்து ஆய்வு செய்ய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து முடிவெடுக்கும் என தெரியவந்துள்ளது.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback