Breaking News

15 வயது சிறுவனை கார் ஏற்றி கொண்ட உறவினர் அதிர்ச்சி சிசிடிவி வீடியோ

அட்மின் மீடியா
0

15 வயது சிறுவனை கார் ஏற்றி கொண்ட உறவினர் அதிர்ச்சி சிசிடிவி வீடியோ


கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பூவாச்சல் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி தீபா. இவர்களது மகன் ஆதிசேகர் (வயது 15). இவர் 10ம் வகுப்பு படித்து வந்தார்

கடந்த 30-ந்தேதி ஆதிசேகர், அருகில் இருக்கும் கடைக்கு செல்வதற்காக தனது சைக்கிளில் சென்றுள்ளார்.அந்த சமயத்தில் அவரது பின்னால் வந்த கார் ஒன்று மோதியதில், காரின் சக்கரத்திலே நசுங்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் ஆதிசேகரின் பெற்றோர், போலீசில் ஒரு புகார் கொடுத்தனர். அதில் தங்கள் மகன் விபத்தில் சாகவில்லை. அவனது சாவில் சந்தேகம் உள்ளது என குறிப்பிட்டு இருந்தனர். அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

விபத்து நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சிறுவன் ஆதிசேகர் சென்ற சைக்கிள் மீது கார் கார், வேண்டும் என்றே மோதும் காட்சி பதிவாகி இருந்தது. இதனால் போலீசார், கார் குறித்து விசாரணை நடத்தினர். இதில் ஆதிசேகர் மீது திட்டமிட்டு காரை ஏற்றி கொலை செய்திருப்பது தெரியவந்தது.

ஏன் என்றால் சிறுவன் வரும் வரை அங்கு காத்திருந்த கார், பின்னர் அவன் வந்ததும் அவனை பின்தொடர்ந்து சென்று இடித்துள்ளது. இதில் சிறுவன் கீழே விழுந்த பிறகு ரிவர்சில் வந்த கார் மீண்டும் அவன் மீது ஏறியது. இதில் தான் சிறுவன் உடல் நசுங்கி உயிரிழந்திருக்கிறான்

இதையடுத்து அந்த கார் யாருடையது என்று விசாரிக்கையில் சிறுவனின் உறவினரான அதே பகுதியை சேர்ந்த பிரியரஞ்சன் என்பவர் என்று தெரியவந்தது. இதையடுத்து அவரை விசாரிக்க சென்றபோது, பிரியரஞ்சன் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து தொடர்ந்து உறவினர், சிறுவன் குடும்பத்தாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கொலைக்கான காரணம் என்ன:-

கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் மூன்று மாதங்களுக்கு முன்பு அங்குள்ள ஒரு கோயிலின் சுவற்றில் பிரியரஞ்சன் சிறுநீர் கழித்துள்ளார். 

இதை பார்த்த சிறுவன் ஆதி சேகர், அடுத்த நாள் பிரியரஞ்சன் தனது மனைவி குடும்பத்தினருடன் வெளியே சென்ற போது, அவரை பார்த்து "இவ்வளவு பெரிய ஆளாக வளர்ந்துட்டு கோயில் சுவரை அசிங்கப்படுத்துகிறாயே" என திட்டியதாக தெரிகிறது. ஆதி சேகரின் இந்த செயல் பிரியரஞ்சனுக்கு மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனால் ஆதிசேகரை பழிவாங்கும் நோக்கத்தில் அவனை திட்டமிட்டு பிரியரஞ்சன் கொலை செய்திருப்பது போலீஸாருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, பிரியரஞ்சனை பிடிக்க 3 தனிப்படைகளை காவல்துறை அமைத்திருக்கிறது. எல்லோருக்கும் முன்பு தன்னை அவமானப்படுத்திய சிறுவனை மூன்று மாதங்கள் கழித்து உறவினரே தீர்த்துக்கட்டிய சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சிறுவனை கார் ஏற்றி கொன்ற சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

வீடியோ பார்க்க:-

https://twitter.com/cheguwera/status/1700837187015643158

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback