Breaking News

திருவண்ணாமலை அருகே இந்தி தேர்வு எழுத ஹிஜாப் அணிந்து வந்ததால் அனுமதி மறுப்பு hijab tiruvannamalai

அட்மின் மீடியா
0

திருவண்ணாமலை மாவட்டம் கோமாசிபாடி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் இன்று பாரத் இந்தி பிரசார சபாவின் தேர்வு நடந்தது.  இந்த தேர்வு எழுத திருவண்ணாமலை கரிகாலன் தெருவை சேர்ந்த அரபு மொழி ஆசிரியர் ஷபானா இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகின்றார்


மேலும் ஷபானா ஹிஜாப் அணிந்து தனது தேர்வு எழுத வந்திருந்தார். அவர் தனது ஹால்டிக்கெட்டை காண்பித்து தேர்வறைக்கு சென்றார். அவருக்கு கேள்வித்தாள் வழங்கப்பட்டது. தேர்வும் தொடங்கிய நிலையில் 10 நிமிடம் கழித்து ஹிஜாப்பை அகற்றும்படி ஷபானாவிடம் கூறியுள்ளனர். 

இதையடுத்து ஹிஜாப்பை கழற்ற மறுத்ததாக கூறி அவர் தேர்வறையில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியது.


இந்த செய்தியினை கேள்விபட்டு அங்கு வந்த இஸ்லாமிய கட்சியினர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை நகர டிஎஸ்பி குணசேகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.  பேச்சு வார்த்தையில் இறுதியில் மாணவியை மீண்டும் தேர்வு எழுத அனுமதித்த நிலையில் மாணவியின் மனநிலை சரியில்லாத காரணத்தினால் தான் தேர்வு எழுதவில்லை என தேர்வு அறையை விட்டு வெளியே சென்றார்.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback