பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்
அட்மின் மீடியா
0
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்
நடைபெற்ற ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் 18.08.2023 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்படும்.
தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வரும் 18ம் தேதி முதல் அந்தந்த பள்ளிகளிலேயே அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
Tags: கல்வி செய்திகள்
