Breaking News

பேருந்தை தள்ளிய கல்லூரி மாணவிகள் வைரல் வீடியோ ஓட்டுநர், நடத்துநர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம்

அட்மின் மீடியா
0
  • கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பழுதாகி நின்ற அரசு பேருந்தை கல்லூரி மாணவிகள் தள்ளிய விவகாரம் தொடர்பாக 
  • ஓட்டுநர், நடத்துநர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் 
  • பழுதாகி நின்ற அரசு பேருந்தை மாணவிகளை வைத்து தள்ளிச்சென்ற வீடியோ  வெளியாகி வைரல் ஆன நிலையில் நடவடிக்கை

 

 நாகர்கோவில் பகுதியில் உள்ள  குருசடி என்ற இடத்தில் உள்ள கல்லூரிக்கு மகளிர் மட்டும் பயணம் செய்யும் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் மகளிர் மட்டும் பயணம் செய்யும் அந்த அரசு பேருந்து, கோட்டாறு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது பழுதாகி வழியிலேயே நின்றுள்ளது.

இதனால் அந்த பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவிகள் பேருந்தில் இருந்து இறங்கி பழுதான அந்த பேருந்தை தள்ளிச் சென்றுள்ளனர். 

அதைத் தொடர்ந்து, மாணவிகளின் இந்த செயல் வீடியோ எடுக்கப்பட்டு, சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதையடுத்து, மாணவிகள் பேருந்தை தள்ளிச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

பழுதாகி நின்ற அரசு பேருந்தை கல்லூரி மாணவிகள் தள்ளிய விவகாரம் தொடர்பாக ஓட்டுநர், நடத்துநர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்

வீடியோ பார்க்க:-

https://twitter.com/rightnews_ind/status/1696388585652674615

Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback