Breaking News

ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை ஒட்டி, ஈரோடு மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது



சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாள் ஆகஸ்ட் 3 ம் தேதியன்று கடைபிடிக்கப்படுகிறது. இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஈடாக வருகிற 12ம் தேதியன்று வேலை நாளாக கடைபிடிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback