Breaking News

தெரியாமல் தவறுதலாக கொசு மருந்தைக் குடித்த 2 வயது குழந்தை உயிரிழப்பு

அட்மின் மீடியா
0

சென்னை மணலி மாத்தூரில் கொசுக்களை விரட்ட பயன்படுத்தப்படும் மருந்தை தெரியாமல் தவறுதலாக குடித்த இரண்டு வயது குழந்தை லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தது



சென்னை மணலி மாத்தூரை  சேர்ந்த பாலாஜி - நந்தினி தம்பதியரின் இரண்டாவது மகள் 2 வயது லட்சுமி , நேற்று செவ்வாய்க்கிழமை மதியம்   தாய் நந்தினி வீட்டு வேலைகளை பாா்த்துக் கொண்டிருந்தாா். 

அப்போது ஸ்விட்ச் போர்டில் பொருத்தப்பட்டிருந்த கொசுவிரட்டி மருந்தை எடுத்து விளையாடி அதனை வாயில் வைத்து உறிஞ்சி உள்ளார். 

குழந்தை கொசு விரட்டி மருந்தை உறிஞ்சியதை பார்த்ததும் பதறிப்போய் உடனே அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி குழந்தையின் உயிர் பிரிந்தது. இது தொடர்பாக மாதவரம் பால் பண்ணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

பெற்றோர்களே, உங்கள் குழந்தைகளுக்கு எட்டும் வகையில் கொசு விரட்டி மருந்துகளை வைக்க வேண்டாம்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback