Breaking News

கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முழு விவரம் dig vijayakumar commit suicide

அட்மின் மீடியா
0

கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார் தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார் தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் விசாரித்து வருகின்றனர்



கோவை சரக காவல்துறை துணைத் தலைவராக பணியாற்றி வந்த முத்துசாமி பணிமாறுதல் பெற்றதைத் தொடர்ந்து, கோவை சரக காவல்துறையின் புதிய துணைத் தலைவராக விஜயகுமார் அவர்கள் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றுக்கொண்டார். 

இவர் கடந்த 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் இணைந்த விஜயகுமார் அவர்கள் . தமிழகத்தின் பல மாவட்டங்களில் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் அவர் தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார், அவரது உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அவர் தற்கொலைக்கான காரணம் என்ன? என்று காவல்துறையினர் விசாரித்து வருகின்றார்கள். ஓர் காவல்துறை உயர் அதிகாரி இப்படி தற்கொலை செய்து கொண்டது காவல்துறை வட்டாரத்தில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback