Breaking News

வாடிக்கையாளர்களுடன் தங்கும் விடுதிக்கு வரும் டிரைவர்களுக்கு கழிப்பிட வசதியுடன் கூடிய ஓய்வு அறை தரவேண்டும் தமிழக அரசு அரசானை

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் உள்ள அனைத்து விதமான தங்கும் விடுதிகள் வாடிக்கையாளர்களுடன் வரும் வாகன ஓட்டிகளுக்கு என பிரத்யோகமாக கழிப்பிட வசதியுடன் கூடிய ஓய்வு அறை ஏற்படுத்தித் தர வேண்டும் என தமிழக அரசு உத்தரவு


தமிழகத்தில் மக்கள் சுற்றுலா செல்லும் போது வாகன ஓட்டிகளுக்கென தனியாக எந்தவித அறையும் ஏற்பாடு செய்யப்படுவதில்லை. மேலும், இரண்டு, மூன்று நாட்கள் சுற்றுலா சென்றாலும் கூட வாகன ஓட்டுனர்கள் வாகனங்களிலேயே ஓய்வெடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. 

வாகன ஓட்டிகள் நீண்ட தூரம் சுற்றுலா செல்லும் போது சுற்றுலா செல்வோர் தங்கும் இடத்தில் ஓட்டுனர்களுக்கும் தனியாக அறை ஒதுக்கி தர வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

இந்த உத்தரவில், ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளின் உள்ளேயோ, அல்லது அந்த இடத்தில் இருந்து 250 மீட்டர் தொலைவிலோ வாகன ஓட்டுனர்களுக்கான தூங்குமிட வசதிகள் செய்து தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே சுற்றுலா வாகன ஓட்டுனர்களுக்கு ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் தூங்கும் வசதிகள் ஏற்படுத்தித்தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த முடிவு வாகன ஓட்டுனர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback