Breaking News

கருக்கலைப்பிற்கு உரிய அனுமதி வழங்க மருத்துவமனைகளில் தனி வாரியம் அமைக்க - அரசாணை வெளியீடு

அட்மின் மீடியா
0

கருக்கலைப்பிற்கு உரிய அனுமதி வழங்க மருத்துவமனைகளில் தனி வாரியம் அமைக்க - அரசாணை வெளியீடு



கருக்கலைப்பிற்கு உரிய அனுமதி வழங்குவது தொடர்பாக முடிவு எடுக்க அரசு மருத்துவமனைகளில் தனி வாரியம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

சட்ட ரீதியான கருக்கலைப்பு செய்ய உரிய அனுமதி வழங்குவது தொடர்பாக முடிவு எடுக்க 32 அரசு மருத்துவமனைகளில் தனி வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.எனவும்

கருக்கலைப்பு செய்யும் பெண்களை பரிசோதித்து சிசுவை கலைப்பதற்கான கருத்துக்களை வாரியம் 2 நாட்களுக்குள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது

மேலும் உரிய காரணம் இல்லாமல் கருக்கலைப்பு செய்ய விண்ணப்பித்தால் அதை நிராகரிக்கவும் வாரியத்திற்கு அதிகாரம் உண்டு என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback