Breaking News

அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழை சென்னை வானிலை ஆய்வு மையம்

அட்மின் மீடியா
0

அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழை சென்னை வானிலை ஆய்வு மையம்

தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வரும் ஜூலை 3-ம் தேதி முதல் ஜூலை 5-ம் தேதி வரை 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு செங்கல்பட்டு , காஞ்சிபுரம் , திருப்பத்தூர் , வேலூர் , திண்டுக்கல் , தேனி , மதுரை ஆகிய 7 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback