ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகாரப்பூர்வ அறிவிப்பு odisha train accident
ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஒடிசா அரசு.
ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்ததாக ஒடிசா அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒடிசா அரசின் தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்
ரயில் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை பலவாறாக வெளியாகிறது. பாலசோர் மாவட்ட நிர்வாகம் ரயில் விபத்தில் சிக்கியவர்களை அனுமதித்த மருத்துவமனைகள், பிணவறைகள் ஆகியவற்றில் இருந்து தரவுகள் எடுக்கப்பட்டு கணக்கிடப்பட்டு இறந்தவர்கள் எண்னிக்கை 288 என எண்ணிக்கையை உறுதி செய்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.
மேலும் ரயில் விபத்தில் இறந்த 288 பேரில் இதுவரை 205 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் 83 பேர் யாரென்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் உடல்களை அடையாளம் காணுவதற்கான பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். ரயில் விபத்தில் ஒடிசாவைச் சேர்ந்த 39 பேர் விபத்தில் இறந்துள்ளார்கல் எனவும் தெரிவித்துள்ளார்
Tags: இந்திய செய்திகள்