அமைச்சர் செந்தில் பாலாஜி மயக்கநிலையில் தான் உள்ளார் மருத்துவமனை தரப்பில் தகவல்
அமைச்சர் செந்தில் பாலாஜி மயக்கநிலையில் தான் உள்ளார் மருத்துவமனை தரப்பில் தகவல்
அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக செந்தில் பாலாஜியை அழைத்துச் செல்ல முயன்றபோது, அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயர் ரத்த அழுத்தம், நெஞ்சு வலி காரணமாக அவர் மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டுள்ளார்.அதன்பின் ஐசியூ-வில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு ஈசிஜி இயல்பாக இல்லை எனத் தகவல் வெளியானது. செந்தில் பாலாஜியின் சிகிச்சை பெறும் அறை துணை ராணுவப்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது
இந்நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனை தரப்பில்
அமைசச்ர் செந்தில் பாலாஜியின் உடலநிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மயக்க நிலையிலேயே உள்ளார். இதயத்துடிப்பு, உடலில் ஆக்சிஜன் சமநிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இரண்டிலிருந்து 3 நாட்கள் வரை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை தேவைப்படுகிறது. சீரான இதயத் துடிப்பு இல்லாத நிலையில் தேவைப்பட்டால் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்