ஆகம பூஜைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் யாராக இருந்தாலும் அர்ச்சகராகலாம்.! உயர்நீதிமன்றம் தீர்ப்பு
ஆகம, பூஜைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் அர்ச்சகராகலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சேலம் சுகவனேஸ்வரர் கோவிலுக்கு புதிய அர்ச்சகக்கற்களை நியமிக்க அறநிலையத்துறை சார்பில் கடந்த 2018ஆம் ஆண்டு காலிப்பணியிட அறிவிப்பு வெளியானது. ஆகம விதிகள் படித்து இருந்தால் அதில் யார்வேண்டுமானாலும் அர்சகர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதை எதிர்த்து அதே கோயில் பணிபுரிந்துவந்த சுப்ரமணிய குருக்கள் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், சுகனேஸ்வர் கோயில் ஆகமத்தின் அடிப்படை ஆனது, இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ள தகுதிகள், ஆகமத்தின் அடிப்படை இல்லை என்று கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணை முடிந்து இன்று வழங்கபட்ட தீர்ப்பில்
ஆகம விதிகளைக் கடைபிடிக்கும் கோயில்களின் தலைமை அர்ச்சகர்கள் அளிக்கும் தகுதிச்சான்றின் அடிப்படையில் கோயில்களில் காலியாக உள்ள அர்ச்சகர்கள் மற்றும் ஸ்தானிகர்களை நியமிக்கும் அரசின் சட்டத்தை ஏற்று நீதிபதி உத்தரவிட்டார்
அந்தந்த கோவில்களில் பின்பற்றப்படும் ஆகம விதிகளை தெரிந்து அதில் தேர்ச்சி பெற்று இருந்தாலே போதுமானது. ஆகமத்தை பின்பற்றாத கோவில்களை ஆகமத்தை படிக்காதவர்களும் அர்ச்சகர்கள் ஆகலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
Tags: தமிழக செய்திகள்